மேம்பால பணி காரணமாக தெற்கு உஸ்மான் சாலை பகுதிகளில் நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்: மாநகர காவல்துறை அறிவிப்பு

சென்னை:  சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தெற்கு உஸ்மான் மேம்பாலத்தில் இருந்து அண்ணாசாலை சிஐடி நகர் 1வது மெயின் ரோடு வரை மேம்பால கட்டுமான பணிகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், தெற்கு உஸ்மான் சாலை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை முதல் வரும் செப்டம்பர் 27ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்திலிருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணாசாலை சிஐடி நகர் 1வது மெயின் ரோடு செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, கண்ணமாபேட்டை சந்திப்பு, தெற்கு போக்கு சாலை, மூப்பராயன் தெரு, இணைப்பு சாலை வந்து அண்ணா சாலையை அடையலாம்.

தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்திலிருந்து வரும் மாநகர பேருந்துகள் தெற்கு உஸ்மான் சாலை வழியாக செல்ல தடை செய்யப்பட்டு, மேட்லி சந்திப்பு, பார்கிட் சாலை, மூப்பராயன் தெரு, இணைப்பு சாலை வந்து அண்ணாசாலையை அடையலாம். ரெங்கநாதன் சுரங்கப்பாதையில் இருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணாசாலை சிஐடி நகர் 1வது மெயின் ரோடு செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, மேற்கு சிஐடி நகர் வடக்கு தெரு வழியாக வந்து அண்ணாசாலையை அடையலாம். அண்ணாசாலை சிஐடி நகர் 1வது மெயின் ரோடு சந்திப்பிலிருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக தி.நகர் பேருந்து முனையத்திற்கு செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம்.

Related Stories: