தபால் நிலையத்தில் பணம் கொள்ளை

சென்னை: மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி அருகே துணை தபால் நிலையம் உள்ளது. இந்த அலுவலகத்தில் சுமன் (42) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று காலை 9 மணிக்கு தபால் நிலையத்தை திறக்க வந்தபோது, அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, அலுவலகத்தில் வைத்திருந்த ரூ.1400 திருடு போனது தெரிந்தது.

இதுகுறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அதன்பேரில், குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விவேகானந்தா கல்லூரி அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: