விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தார். அவரை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். முதலில் ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், கோயில் வளாகத்தில் உள்ள பெரிய பெருமாள் சன்னதிக்கும் சென்று தரிசனம் செய்தார். இதன்பிறகு திருவில்லிபுத்தூர் அருகே செண்பகதோப்பு பகுதியில் உள்ள தனது குலதெய்வ கோயிலான வனபேச்சி அம்மன் கோயிலுக்கு சென்றார்.