உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் பரிதமாக உயிரிழந்தனர். நேபாளத்தில் நேற்று மதியம் ரிக்டர் அளவுகோலில் 5.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் உத்திரப்பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் உணரப்பட்டநிலையில் அடுத்த சில நிமிடங்களில் அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற மீட்பு படையினர் விடிய விடிய மீட்பு பணியில் ஈடுபட்டனர்.இதுவரை 14 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 5 பேர் ஒரே அறையில் இடிபாடுகளுக்கு நடுவே சிக்கி கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
