தேனி: ‘நம் வழி தனிவழியாக இருக்க வேண்டும்’ என தேனியில் நடந்த வரவேற்பு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். தேனி மாவட்டம், கம்பத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராமராஜ் மற்றும் கூடலூர் நகர அதிமுக செயலாளர் அருண்குமார் ஆகியோரது இல்ல திருமண விழாவை நேற்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வைத்தார். இதற்காக நேற்று காலை தேனி மாவட்டத்திற்கு வந்தார். ஒற்றைத்தலைமை பிரச்னை ஏற்பட்ட பிறகு முதன்முறையாக தேனி மாவட்டத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு, தேனி அருகே மதுராபுரியில் அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, சண்முகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.