புதுடெல்லி,: இந்தியா ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்ரையர் பிரிவில், தென் கொரியாவின் ஆன் செயாங் சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையும் 2 முறை உலக சாம்பியனுமான அகானே யாமகுச்சியுடன் (ஜப்பான்) நேற்று மோதிய ஆன் செயாங் (20 வயது) 15-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக்கொண்டு விளையாடி அதிரடியாக புள்ளிகளைக் குவித்த அவர் 21-16, 21-12 என்ற கணக்கில் அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி முதல் முறையாக இந்தியா ஓபன் தொடரில் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். இப்போட்டி 1 மணி, 12 நிமிடத்துக்கு நீடித்தது.