செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம், திருப்பனமூர் வெங்கட்ராயன்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ்(43). ஆவின் அலுவலக செயல் மேற்பார்வையாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்த பின் வீட்டிற்கு பைக்கில் சென்றார். பாப்பாந்தாங்கல் கூட்ரோடு அருகே நள்ளிரவு 12 மணியளவில் திடீரென ஒரு வாலிபர் பைக்கை நிறுத்தி, ‘என் பெயர் மணிகண்டன். மோரணம் காவல் நிலையத்தில் சிபிசிஐடி போலீசாக உள்ளேன். செல்போனில் சார்ஜ் இல்லை. உடனடியாக காவல்நிலையத்திற்கு அவசர தகவல் பரிமாற வேண்டும்.