ஸ்ரீநகர்: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. இணைந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைப்பயணம் காஷ்மீரில் நிறைவடைய உள்ளது. தமிழ்நாட்டில் தொடங்கிய பயணம் கேரளா, கர்நாடாகா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து இன்று ஜம்மு-காஷ்மீருக்குள் நடைப்பயணம் மேற்கொள்கின்றனர். லகன்பூர் எல்லையில் ராகுல் காந்தியை ஏராளமானோர் வரவேற்றனர். இன்று காலை ஹட்லி மோர்க் என்ற இடத்தில் தொடங்கிய நடைப்பயணம், மோசமான வானிலையால் நடைபயணம் ஒரு மணி நேரம் தாமதமானது. பிறகு நடைபயணம் தொடங்கியதுமே மழை பெய்தது.
