புதுடெல்லி: இந்தியா பாகிஸ்தானுடன் எப்போதும் நட்புறவை விரும்புவதாகவும், ஆனால் பயங்கரவாதம் இல்லாத சூழல் பாகிஸ்தானில் நிலவ வேண்டும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவுடனான போருக்கு பின்னால் நாங்கள் பாடம் கற்று கொண்டோம், இப்போது இந்தியாவுடன் நாங்கள் அமைதியான உறவை விரும்புகிறோம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.