லண்டன் இந்திய தொழிலதிபருக்கு விருது

லண்டன்: லண்டனில் வசிக்கும் இந்திய தொழிலதிபருக்கு ப்ரீடம் ஆப் சிட்டி ஆப் லண்டன் விருது வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ப்ரீடம் ஆப் சிட்டி ஆப் லண்டன் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் லண்டனை சேர்ந்த இந்திய தொழிலதிபர் மனிஷ் திவாரிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. நிதித்துறையில் அவரது சிறப்பான பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.  

Related Stories: