புதுடெல்லி: வடமாநிலங்களில் ஜன.19க்கு பிறகு தான் குளிர் மெதுவாக விலகும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது. வடமாநிலங்களில் கடும் குளிர்வாட்டி வதைத்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கிறதே தவிர குறையவில்லை. இந்தநிலையில் வரும் 19ம் தேதி முதல் தான் குளிர் மெதுவாக குறையத்தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இமயமலையில் இருந்து வரும் குளிர்ந்த பனிக்காற்று காரணமாகத்தான் இந்த சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன.19ம் தேதிக்கு பிறகு குளிர் காற்று வீசும் திசை மாறும். அதன்பின்னர் வெப்பம் அதிகரித்து குளிர் குறையத்தொடங்கும். அதுவரை டெல்லி, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உபி, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் குளிர் நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.