திருவள்ளுவருக்கு மோடி புகழாரம்

புதுடெல்லி: திருவள்ளுவரின் உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த ஞானி திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். இயல்பாகவே பன்முகத்தன்மை கொண்ட அவரது கருத்துக்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன.  இளைஞர்கள் அவசியம் திருக்குறளை படிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். குறள் மிக நுட்பம் வாய்ந்தது என்பதை அவர்கள் உணர்வார்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories: