புதுடெல்லி: முன்னாள் ஆயுதப்படை வீரர்கள் தினத்தையொட்டி போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய ராணுவ தளபதி எந்த சவாலையும் எதிர்கொள்ள தயார் என்று அறிவித்தார். முப்படைகளிலும் பணியாற்றி நாட்டிற்கு சேவை செய்த முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14ம் தேதி முன்னாள் ஆயுதப்படை வீரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதன்படி, 7வது முன்னாள் ஆயுதப்படை வீரர்கள் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, விமானப்படை தளபதி மார்ஷல் வி.ஆர்.சவுதாரி, கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.