டெல்லி: தமிழ்நாடு கூட்டுறவு வங்கி கணக்கை ஹேக் செய்து 2.61 கோடி கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாரிமுனையில் தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் தலைமையகம் செயல்பட்டு வருகிறது. அந்த வங்கி கணக்கில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 2.61 கோடி ரூபாய் பணம் திடீரென மாயமானது. அதன் பின்னர் காவல் துறையிடம் வங்கி பணியாளர்கள் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் மிகத் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
விசாரணையின் போது வங்கிக்கு கீ லாக்கர் என்ற ஒரு மெயில் வந்துள்ளது. அந்த மெயிலை வங்கியாளர்கள் ஓபன் செய்து பார்த்துள்ளனர்.