திருப்பூர்: திருப்பூரில் ஆளுநருக்கு எதிராக அனைத்து கட்சி சார்பில் நாளைய தினம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஆளுநராக உள்ள ஆர் என்.ரவி தொடர்ந்து தமிழக மக்களுக்கும், தமிழக அரசுக்கும் எதிரான செயல்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும், தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது, தமிழக சட்டப்பேரவையில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், அம்பேத்கர், கலைஞர் உள்ளிட்டவரின் பெயரை குறிப்பிடாமல் தமிழக அரசின் ஆளுநர் உரையை படித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.