சென்னையில் உள்ள போரூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் 1 வயது குழந்தை தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக தவறிவிழுந்த குழந்தை மேற்கூரை ஒன்றில் தொங்கிய படி கிடந்தது. இதனை பார்த்த அக்கமபக்கத்தினர் கூச்சல் போட்டனர்.
பின்னர் சத்தம் கேட்டு அங்கு கூடிய இளைஞர்கள் குழந்தையை பாகாப்பாக மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். ஜன்னல் வழியாக ஏறி குழந்தையை மீட்கும் பணியில் இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டனர்.
குழந்தை தவறி விழுந்தால் அதை பாதுகாப்பாக மீட்கும் வகையில் கீழே போர்வையை பிடித்தவாறு இளைஞர்கள் சிலர் தயாராக இருந்தனர். ஆனால், ஜன்னல் வழியாக மேலே ஏறிய இளைஞர் குழந்தையை தூக்கி காப்பாற்றினர். இதனால், அந்த குழந்தை நல்வாய்ப்பாக நூழிலையில் உயிர் தப்பியது.
The post சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்து மேற்கூரையில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தை மீட்பு! appeared first on Dinakaran.