சென்னை: தமிழ்நாட்டு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. புருஷோத்தமன் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சட்டப்பேரவையில் கேள்வி நேரம் தொடங்கியது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். குறிப்பாக திருமங்கலம் அதிமுக உறுப்பினர் உதயகுமார் கேள்விகளை எழுப்பி வருகிறார். அதற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்து வருகிறார். காலை 10 - 11 மணி வரை வினாக்கள், விடைகள் நேரமும், அதற்கு பிறகு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான முதல்நாள் விவாதம் தொடங்குகிறது.