புதுச்சேரியில் நள்ளிரவு 1.30 மணி திரைப்பட காட்சிக்கு அனுமதி: புதுச்சேரி ஆட்சியர் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் நள்ளிரவு 1.30 மணி திரைப்பட காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல் அளித்துள்ளனர். இரவு 1.30 காட்சி ரத்து என அறிவித்த நிலையில் 3 திரையரங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்கப்பட்டு விட்டதால் அனுமதிக்குமாறு திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் தகவல் தெரிவித்துள்ளனர். 

Related Stories: