நாமக்கல்: கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி இருக்கும் நிலையில், நாமக்கல் கோழி பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தை அடுத்த அழூரில் பறவை காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள பெருமாங்குழி பகுதியில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து சுமார் 2 ஆயிரம் கோழி, வாத்துகளை அழிக்க அம்மாநில நோய் தடுப்பு துறை முடிவெடுத்துள்ளது. நாமக்கல்லில் இருந்து கேரளாவுக்கு தினசரி 1 கோடி முட்டைகள் மற்றும் அதிகளவில் கோழிகள் அனுப்பப்படுவதால் முன்னெச்சரிக்கை கருதி நோய்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.