இலங்கை அணியுடன் நடக்க உள்ள ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணியில், வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சேர்க்கப்பட்டிருந்தார். காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்து வரும் அவர், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமி வளாகத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். போட்டியில் களமிறங்கும் அளவுக்கு முழு உடல்தகுதி உள்ளதா என்பதை கண்டறிவதற்கான பரிசோதனையில் அவர் வெற்றிகரமாக செயல்பட்டதை அடுத்து, இலங்கைக்கு எதிராக அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், மும்பையில் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட பரிசோதனையின்போது, பும்ரா காலில் வலி ஏற்பட்டதை அடுத்து ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்க உள்ள டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டியில் பும்ரா விளையாடுவதும் கேள்விக்குறியாகி உள்ளது.