கொழும்பு: பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கையில் பொது போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்தியா 75 பஸ்களை அந்நாட்டிற்கு வழங்கி உள்ளது. கொரோனா பாதிப்பை தொடர்ந்து, இலங்கையில் பொருளாதாரம் முடங்கியதால், கடந்த ஆண்டு மே மாதம் அந்நாடு திவாலானதாக அறிவித்தது. நெருங்கிய அண்டை நாடு என்ற வகையில் இந்தியா , இலங்கைக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. கடந்த ஓராண்டில் ரூ.32,000 கோடி கடன் உதவி வழங்கி உள்ளது. இந்நிலையில், பொது போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்த இந்தியா 75 பஸ்களை இலங்கைக்கு தற்போது வழங்கி உள்ளது.