கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த புளியம்பாறை பகுதியில் பிடிக்கப்பட்டு முதுமலை வனப்பகுதியில் விடப்பட்ட அரிசி ராஜா யானை, தற்போது கேரள மாநிலம் முத்தங்கா சரணாலயம் குப்பாடி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் பத்தேரி நகர் பகுதிக்குள் புகுந்து சாலையில் நடந்த சென்ற ஒருவரை தூக்கி வீசியது. வீடுகளை உடைத்து அரிசி மற்றும் உணவுப்பொருளை தேடிய இந்த யானையை பிடித்து முகாமிற்கு கொண்டு செல்லும்படி போராட்டம் நடத்தப்பட்டது.