சென்னை: சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர், ராயப்பேட்டையில் உள்ள கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மதியம் கல்லூரி முடிந்து, தனது சக கல்லூரி நண்பர்களுடன் பேருந்தில் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள பல்லவன் மேம்பால சிக்னலில் இறங்கி உள்ளார். அப்போது அங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கையில் ‘பீர் பாட்டிலுடன் பச்சையப்பாஸ் காலேஜ் ஜே’ என்று கூச்சலிட்டு வந்தனர். அங்கு நின்று கொண்டிருந்த மாணவனை திடீரென வேறு கல்லூரி மாணவன் என கூறி மற்றொரு கல்லூரி மாணவனின் முகத்தில் சரமாரியாக குத்தியுள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த காவலர்கள் காயமடைந்த மாணவனை மீட்டு சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.