மணிப்பூரில் போலோ வீரரின் 120 அடி உயர சிலை: அமித் ஷா திறந்து வைத்தார்

இம்பால்: மணிப்பூரில் 120 அடி உயர போலோ வீரரின் சிலையை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று திறந்து வைத்தார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா திரிபுரா, மணிப்பூர்,மேகாலயா உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் சுற்றுபயணம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் திரிபுராவில் மாநில பாஜ அரசின் சாதனைகளை விளக்கும் ரத யாத்திரையை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மணிப்பூருக்கு வந்தார். மணிப்பூர், இம்பால் கிழக்கு மாவட்டம், மார்ஜிங் போலோ வளாகத்தில் 120 அடி உயர போலோ வீரரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. குதிரை மீது ஒரு வீரர் அமர்ந்து போலோ விளையாடுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ள சிலையை அமித் ஷா நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநில முதல்வர் பிரேன் சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர். போலோ விளையாட்டின் பிறப்பிடம் மணிப்பூர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சுராசந்த்பூரின் முதலாவது மருத்துவ கல்லுாரியை அவர் திறந்து வைத்தார்.

Related Stories: