சென்னை: விதிகளை மீறியதாக பிரபல நடிகர் கிஷோர் குமாரின் டிவிட்டர் கணக்கு திடீரென முடக்க பட்டுள்ளது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர் கிஷோர் குமார். இவர் தமிழில் வெண்ணிலா கபடிகுழு, ஆடுகளம் உள்பட பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த ஆண்டு கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது காந்தாரா திரைப்படத்திலும் வனத்துறை அதிகாரி வேடத்தில் கிஷோர் குமார் நடித்திருந்தார்.