இலங்கைக்கு எதிரான ஒயிட்பால் கிரிக்கெட் தொடர் இந்திய அணி இன்று அறிவிப்பு: இளம் வீரர்களுக்கு வாய்ப்பு

மும்பை: இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த வாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி.20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. சேத்தன்சர்மா தலைமையிலான தேர்வு குழுவினர் இன்று கூடி அணியை தேர்வு செய்கின்றனர். கட்டைவிரல் காயத்தில் இருந்து ரோகித்சர்மா முழுமையாக குணமடையாததால் டி.20 போட்டிகளில் ஆடமாட்டார்.

பிப்ரவரியில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் வருவதால், பிசிசிஐ எந்த ரிஸ்க்கும் எடுக்க விரும்பவில்லை. மருத்துவக் குழு காயம் மதிப்பீட்டை நடத்தும். ரோகித்சர்மா 100% குணமடைந்தால் மட்டுமே அணிக்கு திரும்புவார் என பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் மோசமான பார்ம் காரணமாக கே.எல்.ராகுல், மூத்த வீரர் விராட் கோஹ்லி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படாது என தெரிகிறது. ஹர்திக் பாண்டியா டி.20 போட்டிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட உள்ளார்.

டி.20 அணியில் ரிஷப் பன்ட், இஷான்கிஷன், சூர்யகுமார் யாதவ், சஞ்சுசாம்சன், ஸ்ரேயாஸ் அய்யர், தீபக்கூடா, பிரித்வி ஷா, ருதுராஜ் கெய்ட்வாட் மற்றும் பவுலிங்கில் புவனேஸ்வர்குமார், உம்ரான்கான், ஹர்சல்பட்டேல், தீபக்சாகர், ஷர்துல்தாகூர், குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் இடம்பெறுவார்கள் என தெரிகிறது. ஒருநாள் தொடருக்கான அணியில் ரோகித்சர்மா, ஜடேஜா, பும்ரா மற்றும் விராட்கோஹ்லி சேர்க்கப்பட உள்ளனர்.

Related Stories: