தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் 2வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையின் காரணமாக 2வது நாளாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலத்தில் சீசன் காலம் முடிந்தும் அவ்வப்போது அருவிகளில் தண்ணீர் விழுந்து வருகிறது. தற்போது, சபரிமலை சீசன் என்பதால் தினமும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் அருவிகளில் குளித்து செல்கிறார்கள். அதுபோல் சுற்றுலா பயணிகளுக்கும் குளித்து செல்கின்றனர். இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
