சென்னை: டிரினிட்டி இன்டர்னேஷனல் என்ற நிறுவனம், டில்லி ஜனக்புரியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நடப்புக் கணக்கை பராமரித்து வருகிறது. இந்த கணக்கில் இருந்து ஒரு கோடியே 54 லட்சத்து 20 ஆயிரத்து 800 ரூபாயை மும்பையில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கிக் கணக்குக்கு அனுப்பப்பட்டது. பின்னர் லண்டனில் அதே வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கடந்த 1991ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு டில்லி அமலாக்கப்பிரிவு அபராதம் விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, வங்கி சார்பிலும், அதிகாரிகள் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.