வேடசந்தூர்: வேடசந்தூரில் வீட்டிற்குள் புகுந்து சிறுவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, 43 பவுன் நகை, ரூ.18 லட்சத்தை முகமூடி கும்பல் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே சாலையூர் நால் ரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (40). ரியல் எஸ்டேட் அதிபர். மனைவி கலையரசி (35). 14 வயதில் மகன், 13 வயதில் மகள் உள்ளனர். சீனிவாசன் வெளியில் சென்று இருந்த நிலையில், அவரது வீட்டுக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த முகமூடி அணிந்த 5 பேர் கும்பல், மகன், மகளின் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு கலையரசியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.