புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே மொத்தம் 2,289 கிமீ சர்வதேச எல்லை உள்ளது. இதில்,காஷ்மீரில் மட்டும் 772 கிமீக்கு எல்லைகட்டுப்பாடு கோடு உள்ளது. போர் ஒப்பந்தத்தை மீறி கடந்த செப்டம்பர் 6ம் தேதி, ஜம்முவில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென இந்திய ராணுவத்தினர் மீது துப்பாக்கசூடு நடத்தியது. அதை தவிர எல்லையில் இருதரப்புக்கும் பெரிய அளவில் மோதல் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதிகளில் ராணுவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை இந்திய ராணுவம் செய்து வருகிறது.