பாட்னா முதல் எர்ணாகுளம் வரை செல்லும் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு: பாட்னா முதல் எர்ணாகுளம் வரை செல்லும் விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா வேட்டை 3.0 தொடர்பாக ஈரோடு வழியாக செல்லும் ரயில்களில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். ரயிலில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையில் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: