பாரிஸ்: பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சார்லஸ் சோப்ராஜ். அமெரிக்க பெண் ஒருவரை கொலை செய்த வழக்கில் நேபாள போலீசார் சோப்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது 78 வயதாகும் சோப்ராஜை நேபாள நாட்டு உச்சநீதி மன்றம் கடந்த 23ம் தேதி விடுதலை செய்தது. அதன்படி, சிறையிலிருந்து வெளியான உடனேயே நேபாள அரசு சோப்ராஜை பிரான்சுக்கு நாடு கடத்தியது.