சேலம்: உலகம் முழுவதுமுள்ள கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது கிறிஸ்துமஸ் ஆகும். இதையொட்டி ஆண்டுதோறும் இந்திய சிறைப்பணி என்ற அமைப்பினர், சிறையில் இருக்கும் கைதிகளுக்கு சிறப்பு உணவு வழங்கி வருகின்றனர். வருகிற 25ம் தேதி (ஞாயிறு) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், தமிழகம் முழுவதுமுள்ள மத்திய, மாவட்ட, கிளைச்சிறைகளில் உள்ள கைதிகளுக்கு சிக்கன் பிரியாணி வழங்க, தமிழக சிறை டிஐஜியிடம் அனுமதி பெற்றனர். அதன்படி, வரும் 25ம் தேதி வரை ஒவ்வொரு சிறையிலும் சிறப்பு உணவு வழங்கப்படும். இவ்வாறு சிறப்பு உணவு வழங்க வேண்டும் என்றால், சிறையின் வெளியில் இருந்து உணவுகளை தயாரித்து கொண்டு செல்ல அனுமதி இல்லை.