திருவொற்றியூர்: மாதவரத்தில், எம்எல்ஏ நிதியிலிருந்து ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் திறந்து வைத்தார். சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம் 33வது வார்டுக்குட்பட்ட அசோகா தெருவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு, 40 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த கட்டிடம் மிகவும் பழமையானதாக இருந்தது. இதனை, சீரமைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்று, 2021-22ம் ஆண்டுக்கான மாதவரம் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி நடந்தது.
