இமாச்சல் முதல்வருக்கு கொரோனா தொற்று: சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைப்பு

சிம்லா: இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இமாச்சலப்பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, கடந்த 16ம் தேதி ராஜஸ்தானில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டார். இந்நிலையில் முதல்வர் சுக்விந்தர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,‘‘முதல்வர் சுக்விந்தர் சிங் திங்களன்று (நேற்று) பிரதமர் மோடியை சந்திப்பதற்கு திட்டமிட்டு இருந்தார். பிரதமரை சந்திப்பதற்கு முன்னதாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் முதல்வர் சுக்விந்தருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்வர் தன்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவர் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது” என்றார். முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், வரும் 22ம் தேதி துவங்க இருந்த இமாச்சல பிரதேச சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: