ரபேல் வாட்ச் விவகாரம்; அது வேற வாய்... இது வேற வாய்: சமூகவலைதளத்தில் அண்ணாமலையை கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்

சென்னை: ரபேல் வாட்ச் விவகாரத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை மாற்றி, மாற்றி பேசும் வீடியோவை வெளியிட்டு சமூகவலையதளங்களில் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். பாஜ தலைவர் அண்ணாமலை கையில் கட்டியுள்ள ரபேல் வாட்ச் விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக வலம் வருகிறது. குறிப்பாக பல லட்சம் ரூபாய் மதிப்புடைய கைக்கடிகாரத்தை ஆடு, மாடுகள் மட்டுமே சொத்து என சொல்லும் அண்ணாமலைக்கு எப்படி வந்தது. அதன் மதிப்பை வெளியிடமுடியுமா என அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி கேட்டிருந்தார். இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தன்னுடைய பாதயாத்திரை அன்று எல்லா ஆதாரங்களையும் வெளியிடுவேன் என அண்ணாமலை பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் நடந்த பாஜவின் கூட்டத்தில் அண்ணாமலை பேசிய வீடியோவில், இந்த காலம் என்பது சாமானியர்களின் காலம். அதிக மதிப்புடைய காரில் நாங்கள் செல்லவில்லை. விலைமதிப்புடைய பேனாவை வைத்திருக்கவில்லை, செருப்பு அணியவில்லை என பல வசனங்களை மேடையில் பேசியிருந்தார். தற்போது எழுப்பப்பட்டுள்ள பிரச்னைக்குப் பின்னர் கோவையில் பேட்டியளித்த அண்ணாமலை, ‘தான் கட்டிய இருக்கும் வாட்ச் ரபேல் நிறுவனம் தயாரித்தவை’ என கூறுகிறார்.

எப்படி ஒரு சாமானியர், ஆடு மாடு மேய்ப்பவர் பல லட்சம் மதிப்புடைய வாட்ச் கட்டியுள்ளார். அன்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு என ‘‘அது வேற வாய்... இது வேற வாய்’’ என கமென்ட்களை பதிவு செய்து சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

Related Stories: