கூடலூர்: நீர்வரத்து சீரானதையடுத்து, சுருளி அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு வனத்துறை நேற்று அனுமதி வழங்கியது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலங்களில் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியும் ஒன்று. மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் இந்த அருவி அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஈத்தக்காடு, அரிசிப்பாறை ஆகிய பகுதிகளில் மழை பெய்யும்போது இந்த அருவிக்கு நீர்வரத்து இருக்கும்.
