லக்னோ: ஆளும் பாஜகவை வீழ்த்துவதற்காக சந்திரசேகர ராவ், மம்தா பானர்ஜி போன்ற தலைவர்களை போல் நிதிஷ் குமாரும் செயல்பட்டு வருகிறார் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். சமாஜ்வாதி கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியதை வரவேற்கிறேன். 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து நிதிஷ்குமார் கூறிய கருத்து ஏற்கக் கூடியது.