திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் 350க்கு மேற்பட்ட காய்கறி, பழங்கள் மற்றும் மீன் கடைகள் உள்ளது. இந்த கட்டிடம் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏஎம்.விக்கிரமராஜா நேற்று திருவொற்றியூர் மார்க்கெட்டுக்கு வந்தார். பின்னர் அவர் அங்குள்ள வியாபாரிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவரிடம் வியாபாரிகள், மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் இல்லை. கடைகள் அனைத்தும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இங்கு புதிய மார்க்கெட் கட்டி தர வேண்டும்.