திருவள்ளூர்: மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் குடிசை வீடுகள் இடிந்து விழுந்தது. ஆடு, மாடுகள் உயிரிழந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்து வருபவர்களின் குடிசை வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் அங்குள்ள மக்கள், அரசின் தற்காலிக சிறப்பு முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் அடுத்த வெள்ளியூர் கிராமத்தில் பாதிக்கப்பட்டுள்ள 25 இருளர் இன குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்படி, சப் கலெக்டர் ஏ.பி.மகாபாரதி நேரில் சென்று போர்வை, பாய் பிஸ்கட், ரொட்டி மற்றும் சேமியா பாக்கெட், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவை வழங்கினார்.