வந்தவாசி : வந்தவாசி அருகே நள்ளிரவு தனியார் பேருந்து தீ பிடித்து எரிந்ததால் ஜன்னல் கண்ணாடியை உடைத்து பயணிகள் உயிர்தப்பினர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காஞ்சிபுரத்தில் இருந்து தனியார் பேருந்து மூலம் சென்றவர்கள் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். வந்தவாசியை அடுத்த வீரம்பாக்கம் கூட்டு சாலையில் பேருந்து சென்றபோது திடீரென பாலத்தின் மீது மோதி தீ பிடித்தது.