சென்னை: அரசின் நிதிநிலைமைக்கு ஏற்ப வீராணம் ஏரியை தூர் வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உறுப்பினர் சிந்தனைச் செல்வன் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார். வீராணம் ஏரியை தூர்வார ரூ.720 கோடி வரை செலவாகும் என அவர் கூறினார்.