திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், விசைத்தறி வேட்டி சேலை உற்பத்தி மற்றும் கொள்முதல் முன்னேற்றம் குறித்து கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் திருச்செங்கோடு ஆகிய சரகங்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. இதற்கு கைத்தறி மற்றும் நுணிநூல் துறை அமைச்சர் காந்தி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் அமைச்சர் காந்தி பேசுகையில், வரும் பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு தேவையான 1.70 கோடி வேட்டிகள் மற்றும் 1.77 கோடி சேலைகளில் இதுவரை 50 சதவீதம் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.