மதுரை: மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலையை திறந்து வைத்தார். 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று தென்மாவட்ட பகுதிக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர், நேற்று தென்காசியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இன்று காலை மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து, மதுரையில் 13 அடி உயரத்தில் சுமார் 50 லட்சம் செலவில் கட்டப்பட்ட வெண்கல திருவுருவ சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது திறந்து வைத்துள்ளார்.