பிரதமர் மோடியின் இந்த வெறுப்பு பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தில் புகார்களும் குவிந்தன. இந்த நிலையில், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒரு கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பேசும் பேச்சுக்கு கட்சி தலைவர்களே பொறுப்பு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 77-வது பிரிவு கூறுகிறது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஏப்ரல் 29-ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நட்சத்திர பேச்சாளர்கள் நடவடிக்கைக்கு அந்தந்த கட்சி தலைவர்களே பொறுப்பு என்ற அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கட்சியின் உயர்நிலையில் உள்ளவர்கள் பேசும் பேச்சால் தீவிர விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதனிடையே கேரள மாநிலம் கோட்டயத்தில் நடந்த பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசியது தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சு : பாஜக தலைமைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் appeared first on Dinakaran.