மக்களின் சொத்துக்களை பறித்து தங்கள் வாக்கு வங்கிக்கு கொடுக்க காங்கிரஸ் கட்சி திட்டம் தீட்டியுள்ளது. 1985-ல் பரம்பரை சொத்துவரியை ரத்து செய்தவர் காங்கிரசின் ராஜீவ் காந்தி. இந்திராவின் சொத்துகளை தக்கவைக்க பரம்பரை சொத்துவரியை ராஜிவ்காந்தி ரத்து செய்தார். தங்கள் சொத்துகளை காப்பாற்றிவிட்டு தற்போது மக்கள் சொத்துகளை அபகரிக்க முயற்சிக்கிறார்கள். ஆட்சிக்கு வந்தால் பரம்பரை சொத்து வரியை அமல்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலிக்கு ஆபத்து ஏற்படும். பெண்களுக்கு வழங்கப்படும் தாய் வீட்டு சீதனத்தை பறிக்க காங்., திட்டம் தீட்டியுள்ளது. நாற்காலியை பிடிக்க காங்கிரஸ் மீண்டும் போராடுகிறது; அனைத்து வகை ஆட்டங்களையும் ஆடுகிறது. காங்கிரஸுக்கு குடும்பமே முக்கியம்; பாஜகவுக்கு நாட்டை விட பெரியது எதுவுமில்லை,”இவ்வாறு தெரிவித்தார்.
The post பெண்களின் தாலிக்கு ஆபத்து… பெண்களுக்கு வழங்கப்படும் தாய் வீட்டு சீதனத்தை பறிக்க காங்கிரஸ் திட்டம் : பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.