ஈராக்: ஈராக்கில் பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈராக் பிரதமராக முகமது அல்-சூடானி இருந்து வருகிறார். இவர் நியமிக்கப்பட்டதில் இருந்து அங்கு அவ்வப்போது போராட்டம் நடந்து வருகிறது. ஈரான் தெற்கு நகரமான நசிரியாவில் அரக்கு எதிராக போராட்டம் நடந்தது. அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினர்.