உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது எல்லை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி (60), விவசாயி. மனைவி முத்தம்மாளுடன் (55) வசித்து வந்தார், நேற்று இரவு வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு ஒரு பகுதியில் முத்தம்மாளும், மற்றொரு பகுதியில் வீராசாமியும் படுத்து தூங்கினர். இன்று காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைத்தனர்.