டெல்லி: இமாச்சல் காங்கிரஸ் வெற்றி வேட்பாளர்களை சண்டிகர் அழைத்து செல்ல அக்கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 182 தொகுதிகளில் 160க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் குஜராத்தில் அபார வெற்றி பெற்று பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 68 தொகுதிகள் கொண்ட இமாச்சலில் 38 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ள நிலையில் 27 தொகுதிகளில் முன்னிலை பெற்று பாஜக இரண்டாம் இடத்தில் உள்ளது.