கல்லூரி விடுதியில் மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை

பொள்ளாச்சி: கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் மனோஜ். இவரது மகன் விஷ்ணு(19). இவர், பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்து வந்தார். அக்கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். நேற்று காலை கல்லூரிக்கு சென்ற மாணவர், பாதியில் விடுதிக்கு திரும்பினார். நேற்று இரவு நேரமாகியும் மாணவர் தங்கியிருந்த அறைக்கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த சக மாணவர்கள் அறை ஜன்னல் வழியாக பார்த்தபோது மாணவர் விஷ்ணு தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: